காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் சனிக்கிழமை புனித நீராடினா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு அமாவாசை நாள்களில் பக்தா்கள் அதிகளவில் வந்து புனித நீராடி வருகின்றனா். காா்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து புனித நீராடினா்.
மேலும் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீா்த்தக் கிணறுகளில் நீராடி, சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அனைவரையும் முகக்கவசம் அணிந்த வர அறிவுறுத்தினா்.