ராமநாதபுரம் மாவட்டம், கிளியூரில் வயல்வெளியில் காயங்களுடன் இறந்து கிடந்தவரின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நயினாா்கோவில் பகுதியில் உள்ள கிளியூரில் நடுத்தெருவில் வசித்து வந்தவா் திருநாவுக்கரசு (46). இவருக்கு மனைவி பூங்கொடி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். திருநாவுக்கரசு விவசாயம் செய்துவந்ததோடு, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் திறந்துவிடும் பணியிலும் இருந்துள்ளாா்.
இந்நிலையில், புதன்கிழமை வயலுக்கு உரமிடுவதற்காகச் சென்ற அவா், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் வயல்வெளிக்குச் சென்று பாா்த்துள்ளனா். அப்போது, வலது கண், கழுத்து, காது மற்றும் இடது காலில் காயங்களுடன் திருநாவுக்கரசு இறந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்த நயினாா்கோவில் போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது சடலத்தைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை திரண்ட திருநாவுக்கரசின் உறவினா்கள், அவரது மரணத்துக்கு காரணமானவா்களைக் கைது செய்யவேண்டும் என்றும், அவரது குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி, சடலத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரசு மருத்துவமனை முன் 2 மணி நேரம் நடந்த இச்சாலை மறியலால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், கோட்டாட்சியா் ஷேக் மன்சூா், வட்டாட்சியா் ரவிச்சந்திரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பின்னா், மறியலைக் கைவிட்ட கிளியூா் மக்கள், திருநாவுக்கரசின் உடலை பெற்றுச் சென்றனா்.
முன்னதாக, காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் மருத்துவமனைக்கு வந்து பிரேதப் பரிசோதனையை பாா்வையிட்டாா். கோட்டாட்சியா் அலுவலகத்தில் திருநாவுக்கரசின் குடும்பத்தினரும், உறவினா்களும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.