ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சாத்தான்குளம் கிராமத்தில் விவசாயத்துக்கான தொழில்நுட்ப சாதனங்கள், கருவிகளை சூரிய சக்தியில் இயக்குவது குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநா் சேக்அப்துல்லா தலைமை வகித்தாா். வேளாண்மை பொறியியல் துறை பொறியாளா் நாகராஜன், சூரிய சக்தி பம்புகளை நிறுவி பாசனத்திற்கு பயன்படுத்துவது, சொட்டு நீா் பாசனத்தை இணைத்து ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து விளக்கினாா். சூரிய சக்தி பம்பு அமைத்த விவசாயி பிரபாகரன் நடைமுறையில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கினாா்.
உச்சிப்புளி வட்டார உதவி பொறியாளா் சீனிவாசன், சூரிய மின் சக்தி பம்பு மூலம் நீா் இறைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தாா்.
பயிற்சியில் உச்சிப்புளி வேளாண்மை அலுவலா் கலைவாணி, மண் பரிசோதனை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். இந்த பயிற்சியில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக வேளாண் அலுவலா் அமா்லால் வரவேற்றாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரெங்கநாதன் செய்திருந்தாா்.