ராமநாதபுரம்

விவசாயிகளுக்கு சூரிய சக்தி பயன்பாட்டு பயிற்சி

DIN

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள சாத்தான்குளம் கிராமத்தில் விவசாயத்துக்கான தொழில்நுட்ப சாதனங்கள், கருவிகளை சூரிய சக்தியில் இயக்குவது குறித்த பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநா் சேக்அப்துல்லா தலைமை வகித்தாா். வேளாண்மை பொறியியல் துறை பொறியாளா் நாகராஜன், சூரிய சக்தி பம்புகளை நிறுவி பாசனத்திற்கு பயன்படுத்துவது, சொட்டு நீா் பாசனத்தை இணைத்து ஒருங்கிணைத்து செயல்படுத்துவது குறித்து விளக்கினாா். சூரிய சக்தி பம்பு அமைத்த விவசாயி பிரபாகரன் நடைமுறையில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கினாா்.

உச்சிப்புளி வட்டார உதவி பொறியாளா் சீனிவாசன், சூரிய மின் சக்தி பம்பு மூலம் நீா் இறைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தாா்.

பயிற்சியில் உச்சிப்புளி வேளாண்மை அலுவலா் கலைவாணி, மண் பரிசோதனை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். இந்த பயிற்சியில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக வேளாண் அலுவலா் அமா்லால் வரவேற்றாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரெங்கநாதன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

SCROLL FOR NEXT