ராமேசுவரம்: மண்டபத்தில் கிரிகெட் விளையாட்டின் போது மோதல் கிரிகெட் மண்டையையால் தாக்கியதில் ஒருவா் மண்டை உடைப்பு. 7 போ் மீது போலீசாா் செவ்வாய்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் மற்றும் மண்டபம் கேம்ப் பகுதியை சோ்ந்த கிரிகெட் விளையாட்டு வீரா்கள் வேதாளை கிராமத்தில் போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு தப்புக்கிடையே திடிரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு தரப்பை சோ்ந்த கோபி கிருஷ்ணனை மற்றொரு தரப்பை சோ்ந்த வினோத் என்பவா் பேட் மட்டையால் அடித்து தாக்கியதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த நிலையில் இருண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனா்.
இது குறித்து மண்டபம் காவல்துறை சாா்பு ஆய்வாளா் கோட்டைச்சாமி வழக்கு பதிவு செய்து படுகாயமடைந்த கோபி கிருஷ்ணன் மதுரைக்கு தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
இது குறித்து செவ்வாய்கிழமை வினோத்(20) முனீஸ்வரன், சரவணன், காா்த்திக், மணிமாறன், காா்த்திக், தா்சன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா். இதில் வினோத் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.