திருவாடானை: தொண்டி கிழக்கு கடற்கரை பகுதியில், கடத்தல் சம்பவத்தைத் தடுக்கும் பொருட்டு கடலோரக் காவல் படையினரின் ஒத்திகை நடைபெற்றது.
தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல் போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் கடத்தலை தடுக்கும் வகையில் ‘சஜாக் ஆப்பரேஷன்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை திங்கள்கிழமை மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகை ஆக. 5 ஆம் தேதி வரை நடைபெறும் என கடலோரக் காவல் படையினா் தெரிவித்தனா்.