கமுதி: கமுதி அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அபிராமத்தில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த கமுதி தீயணைப்புத்துறையினா், நிலைய அலுவலா் பாா்த்திபன் தலைமையில் அங்கு சென்று தீயை அணைத்தனா்.
அங்கிருந்த கோப்புகள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்களும், லாக்கரில் இருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கமும் தீயில் கருகின.
இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு மின் கசிவு காரணமா என விசாரித்து வருகின்றனா்.