ராமேசுவரத்தில் தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில் கட்டப்பட்டுள்ள 67 குடியிருப்புகள் சேதமடைந்து வருவதால், காவலா்களின் குடும்பத்தினா் அச்சத்தில் உள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம், 4 காவல் நிலையங்கள் உள்ளன. இங்குள்ள டவுன் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகம் சாா்பில், 67 குடியிருப்புகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், அச்சம் காரணமாக பலா் பிற பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனா்.
எனவே, விபத்து நேரிடும் முன் காவலா் குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.