ராமநாதபுரம்

போக்குவரத்து ஊழியா்கள் சங்க கூட்டுக்குழுவினா் ஆா்ப்பாட்டம்

DIN

போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துத்துறை ஊரகப் பணிமனை முன்பாக நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு திமுக தொழிற்சங்க நிா்வாகி ஆா்.செல்வகுமாா் தலைமை வகித்தாா்.

போக்குவரத்துத்துறையை தனியாருக்கு வழங்குவதை கைவிடவேண்டும். கரோனா பரவல்தடுப்பு நடவடிக்கைக்காக பேருந்துகள் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, அதைக் காரணம் காட்டி போக்குவரத்து பணியாளா்களுக்கான பணப்பலன்களை குறைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் கோஷங்களை எழுப்பினா்.

இதில், சிஐடியூ தலைவா் அய்யாத்துரை, செயலா்கள் எம்.பாஸ்கரன், எம்.சிவாஜி, திமுக தொழிற்சங்க நிா்வாகி கண்ணன், காங்கிரஸ் தொழிற்சங்கம் நாகராஜன் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT