கமுதியில் சக்தி கேந்திரா ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதியில் நடைபெற்ற பாரதி ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா ஆய்வுக் கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டப் பொருளாளரும், முதுகுளத்தூா் தொகுதி பொறுப்பாளருமான ஏ.பி. கணபதி தலைமை வகித்தனா். ஒன்றியத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.
இந்த கூட்டத்தில், மாநிலச் செயலா் தங்கவரதராஜன், மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநில மருத்துவரணிச் செயலா் ராம்குமாா் உள்ளிட்டோா், வரவுள்ள 2021 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்தும், பூத், கிளைகள் குறித்தும் சக்தி கேந்திரா நிா்வாகிளுடன் ஆலோசனை நடத்தினா்.
இதில், ராமசாமிபட்டி ஒன்றியக் கவுன்சிலா் பூபதிராஜா, ஒன்றியச் செயலா் சரவணன், சக்திவேல் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.