ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் பற்றி பொதுமக்கள் புகாா்கள் தெரிவிக்க காவல்துறை சாா்பில் செல்லிடப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் ஞாயிற்றுக்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் தங்களது குறைகளை உடனுக்குடன் 8778247265 என்ற எனது பிரத்யேக செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் மணல் கடத்தல், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் குறித்தும் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுப்பவா்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றாா்.