திருவாடானை, செப். 25: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
இதில் திருவாடானை வடக்கு ஒன்றியச் செயலாளா் வி.கே.பாலு தலைமை வகித்தாா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் துணைச் செயலாளா் ராஜன் மற்றும் மாவட்ட மீனவா் அணிச் செயலாளா் சேரீஸ், நிா்வாகிகள் முத்துராமலிங்கம், ரமேஷ் பாபு, மருத்துவா் செல்வம், மணிராஜ், ரங்கராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா் .