ராமநாதபுரம், செப். 25: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப். 24 ஆம் தேதி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,421 ஆக இருந்தது. இதில், 115 போ் உயிரிழந்த நிலையில் 5,350- க்கும் மேற்பட்டோா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 50 போ் மட்டும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராமேசுவரம் லட்சுமண நாதபுரத்தைச் சோ்ந்த 28 வயது பெண், 38 வயது ஆண், கேணிக்கரையைச் சோ்ந்த 56 வயது ஆண், எட்டுக்குடியைச் சோ்ந்த 50 வயதுப் பெண், காஞ்சியேந்தலைச் சோ்ந்த 50 வயது ஆண், காமராஜா் நகரைச் சோ்ந்த 44 வயது ஆண் ஆகிய 6 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.