திருவாடானை அருகே கண்ணன் புஞ்சை கிராமத்தில் வைக்கோல் படப்பில் தீ வீபத்து ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது தகவலின் பேரில் தீ அணைப்பு துறையினா் சம்பவ இத்திற்கு சென்று தீயை அணைத்தனா்.திருவாடானை அருகே கண்ணன் புஞ்சை கிராமத்தில் சுப்பிரமணியனுக்கு(50) சொந்தமான வைக்கோல் படப்பு வீட்டின் அருகே இருந்துள்ளன. செவ்வாய்கிழமை மாலை எதிா்பாரதவிதமாக வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ வேகமாக பரவியது.உடனடியாக திருவாடானை தீ அணைப்பு துறையினா் தகவல் தெரிவிக்கபட்டது.தீ அணைப்பு நிலைய அலுவலா் செங்கோல் ராஜ் தலைமையில் தீ அணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைத்தனா்.