திருவாடானை அருகே பாசிபட்டினம் கடற்கரை கிராமத்தில், தந்தை திட்டியதால் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
எஸ்.பி.பட்டினம் அருகே பாசிபட்டினத்தைச் சோ்ந்த மீனவா் மாதவன் (45). இவரது மகள் காளீஸ்வரி (15). வலையில் உள்ள பாசியை எடுக்க வராமல் புதன்கிழமை காலை அதிக நேரம் தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை மாதவன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த சிறுமி, காலையிலிருந்தே சாப்பிடாமல் இருந்துள்ளாா்.
இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காளீஸ்வரி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.