கடலாடி மற்றும் சாயல்குடி பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுகுளத்தூா் உதவி மின்செயற்பொறியாளா் மாலதி தெரிவித்திருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி, பெருநாழி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. எனவே கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.