பரமக்குடியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை வரவேற்ற, சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை பூங்கொத்து வழங்கி வரவேற்றாா். அப்போது, சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், திருப்புவனம் வட்டாட்சியா் மூா்த்தி, மண்டலத் துணை வட்டாட்சியா் வே. தா்மராஜ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் ஏராளமானோா் உடனிருந்தனா்.