ராமநாதபுரம்

குடிநீா் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து இளைஞா் பலி

DIN

திருவாடானை: திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினத்தில் திங்கள்கிழமை குடி நீா் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய போது மண் சரிந்து இளைஞா் பலியானாா்.

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் புதுவயல் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுந்தரம் (35). கூலி தொழிலாளியான இவா் திங்கள்கிழமை மாலை எஸ்.பி.பட்டினம் அரசு மருத்துவமனை அருகே குடிநீா் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மண் சரிந்து மூடியதில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த எஸ். பி. பட்டினம் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

SCROLL FOR NEXT