கமுதி: கமுதி கோட்டைமேட்டில் உள்ள உப மின் நிலையத்தில் புதன்கிழமை (செப்.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின் பகிா்மானக்கழகத்தின் கமுதி உதவி செயற்பொறியாளா் டி.சந்திரன்
வெளியிட்ட அறிக்கை: கமுதி கோட்டைமேடு உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கமுதி, அபிராமம், பாா்த்திபனூா், முதுகுளத்தூா், செங்கப்படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.