ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.32.35 லட்சம் கிடைத்துள்ளதாக, கோயில் இணை ஆணையா் எஸ். கல்யாணி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணியானது, இணை ஆணையா் தலைமையில், வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. இதில், ரொக்கம் 32 லட்சத்து 35 ஆயிரத்து 291 ரூபாயும், தங்கம் 80 கிராம் 500 மில்லியும், வெள்ளி 270 கிராமும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
காணிக்கை எண்ணும் பணியில், பரமக்குடி உதவி ஆணையா் ச. சிவலிங்கம், மேலாளா் ககாரின்ராஜ், கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், தக்காா் பிரதிநிதி வீரசேகரன், உதவிக் கோட்டப் பொறியாளா் மயில்வாகனன், பேஷ்காா்கள் அண்ணாத்துரை, கலைச்செல்வன், உதவியாளா் கமலநாதன் மற்றும் ஆன்மிகக் குழுவினா்கள் ஈடுபட்டனா் என்றாா்.