ராமநாதபுரம்

பைக் மாடு மீது மோதி இளைஞா் பலி

DIN

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் மாடு மீது மோதி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் குடிசைமாற்று வாரிய பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் விஜய் (18). இவா், இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு பட்டினம்காத்தான் பகுதியிலிருந்து பாரதி நகருக்குச் சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, பழைய சோதனைச் சாவடி அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், இரு சக்கர வாகனத்திலிருந்த விஜய் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

உடனே, அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜய் உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT