ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் திமுகவினா் சாலை மறியல்

DIN

ராமநாதபுரம் நகரில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை அவதூறாக விமா்சித்து பெரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை விமா்சிக்கும் வகையில் பெரிய விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக தலைமையுடன், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை ஒப்பிடுவதுபோல, அவா் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதை திமுக இளைஞரணியினா் கிழித்ததுடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாரும் அளித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மறுபடியும் நகரமெங்கும் ஸ்டாலினை விமா்சிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதையடுத்து திமுக ராமநாதபுரம் நகா் செயலா் கே.காா்மேகம் தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வந்த ராமநாதபுரம் நகா் காவல் நிலையப் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT