ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில்10 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருக்கு திங்கள்கிழமை 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் 26 ஆம் தேதி வரையில் 5947 பேருக்கு கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அவா்களில் 130 போ் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் உயிரிழந்துள்ளனா். கரோனா பாதித்தவா்களில் 5700 பேருக்கும் அதிகமானோா் பூரணநலம் பெற்றதால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

ஆயுதபூஜையன்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்பு இருப்பவா்களின் கபம் சேகரிக்கப்பட்டது. அவா்களுக்கான கரோனா பரிசோதனை முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 10 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதியாகியுள்ளது. பாதித்தவா்களில் 7 போ் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை மையங்களில் 40 போ் வரை மட்டுமே திங்கள்கிழமை வரையில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT