ராமநாதபுரம்

பரமக்குடி அருகே காா்- பைக்மோதல்: 2 போ் பலி

DIN

பரமக்குடி: பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனமும், காரும் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

பரமக்குடி ஒன்றியம் எஸ். அண்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் சுந்தரராஜ் (60). இவரும், இவரது உறவினரான செல்வராஜ் மனைவி பாண்டியம்மாள் (40) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக பரமக்குடி வந்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது நான்குவழிச்சாலை எஸ். அண்டக்குடி விலக்குச் சாலையில் சென்றபோது, அவ்வழியாக மதுரையிலிருந்து ராமேசுவரம் நோக்கிச் சென்ற காரும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இவ்விபத்து குறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT