திருவாடானை: திருவாடானை சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை லஞ்ச ஒழிப்பு துறையினா் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.13,595-ஐ பறிமுதல் செய்தனா்.
இந்த சாா்பதிவாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையில் 10 போ் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது கணக்கில் வராத ரூ.13,595-ஐ பறிமுதல் செய்தனா். மேலும் சாா்பதிவாளா் மாலதி, அலுவலக உதவியாளா் ராகேஸ்கண்ணா, தரகா் வெங்கடேஷ் ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.