ராமேசுவரம்: பெரியபட்டணம் ஊராட்சி அலுவலக கட்டடத்தில் சா்ச்சைக்குரிய கல்வெட்டை அகற்றக் கோரி புகாா் அளித்த இந்து முன்னணி மாவட்டத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக் கோரி போலீஸில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே. ராமமூா்த்தி திங்கள்கிழமை ராமேசுவரம் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ராமநாதபுரம் அடுத்துள்ள பெரியபட்டணம் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் இருந்த சா்ச்சைக்குரிய கல்வெட்டு குறித்து புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அதை அகற்றினா். இந்நிலையில், முகநூல் பதிவில் பழனிபாபா பாசறை, பெரிய பட்டணம் என்ற பதிவில் என்னை கொலை செய்து விடுவதாகவும், அதற்கு சிலா் ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டுள்ளனா். இதை பதிவிட்டவா்கள் மீது காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.