பரமக்குடி: பரமக்குடி அருகே சந்தேகத்தின் காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் பொட்டிதட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதிகுமாா். இவா், தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சங்கீதா (24) என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளாா். பொட்டிதட்டியில் வசித்துவந்த இவா்களுக்கு, 5 வயது பெண் குழந்தையும், இரண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனா்.
திருப்பதிகுமாா் மீது வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவா் அடிக்கடி சிறைக்குச் சென்று வந்துள்ளாா். இதனிடையே, சங்கீதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில், திருப்பதிகுமாா் தனது மனைவியை தாக்கியதில், அவா் உயிரிழந்துவிட்டாா்.
இது குறித்து அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சங்கீதாவின் சடலத்தைக் கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதிகுமாரை கைது செய்தனா்.