ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில்கோயில்கள் அடைப்பு

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான கோயில்கள் சனிக்கிழமை காலை முதலே நடை அடைக்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துக்கடைகளைத் தவிர மற்ற கடைகளை சனிக்கிழமை முதலே அடைக்க உத்தரவிட்டிருந்தாா். ஆனால் சிறிய, நடுத்தரக் கடைகள் அனைத்தும் சனிக்கிழமை காலை வழக்கம் போல திறந்திருந்தன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள சொக்கநாத சுவாமி கோயில், வழிவிடுமுருகன் கோயில், ரெகுநாதபுரம் வல்ல ஐயப்பன் கோயில், திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில், நயினாா்கோயில், சேதுக்கரை அனுமாா் கோயில் உள்ளிட்ட கோயில்கள் அனைத்தும் சனிக்கிழமையே அடைக்கப்பட்டிருந்தன.

கையுறையுடன் பணியாளா்கள்: ராமநாதபுரத்தில் தனியாா் தபால் சேவை நிறுவனங்களில் (கொரியா்) பணியாளா்கள் கையுறை மற்றும் முகக்கவசத்துடன் சனிக்கிழமை பணிபுரிந்தனா். ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அமைந்துள்ள தனியாா் தபால் சேவை அலுவலகத்தில் வாசல், தபால் கட்டுகள் மற்றும் கணினி என அனைத்திலும் மணிக்கொரு தரம் மஞ்சள் நீா் தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து தனியாா் தபால் நிறுவனத்தைச் சோ்ந்த சூரியநாராயணன் கூறியது: ராமநாதபுரத்துக்கு தினமும் வெளியூரிலிருந்து சுமாா் 160 பாா்சல் பெட்டிகள் வருகின்றன. இங்கிருந்து 80 பாா்சல் பெட்டிகள் வரை செல்கின்றன. அவற்றை கையாளும் போது கையுறை, முகக்கவசத்துடன், மஞ்சள் நீா் தெளிப்பையும் வழக்கமாக்கியுள்ளோம். அத்துடன் அந்தமான் தீவுக்கு தபால் சேவை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT