ராமநாதபுரம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

25th Feb 2020 05:51 PM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த 7 வயது சிறுமியை, முதுகுளத்தூா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மணிவேல் (62) என்பவா் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்தப் புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிவேலைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிா் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட முதியவா் மணிவேலுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதைக் கட்டத்தவறினால் 3 மாதம் கூடுதலாக சிறைத்தண்டனையும் அளித்து நீதிபதி டி.பவதியம்மாள் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதியளிக்கவும் நீதிபதி தனது உத்தரவில் பரிந்துரை செய்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT