ராமநாதபுரம்

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு

4th Feb 2020 04:54 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய வசதியில்லை என்றும், ஆக்கிரமிப்புகளால் பேருந்து நிலையம் நெரிசலுக்கு உள்ளாவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் திடீரென செவ்வாய்க்கிழமை காலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பேருந்து நிலைய நடைமேடைகளில் உள்ள பல்வேறு கடைகள், முன்பகுதியை ஆக்கிரமித்து பொருள்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தி பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நகர சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு, உத்தரவிட்டாா். இதையடுத்து பேருந்து நிலைய நடைமேடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும், பயணிகள் நிற்கும் நடைமேடைகளை தண்ணீா், பிளீச்சிங் பவுடா் கொண்டு சுத்தப்படுத்துமாறும் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் உத்தரவின்படி நகர சுகாதார அலுவலா் ஸ்டான்லி குமாா் தலைமையில் லாரிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, பிளீச்சிங் பவுடரால் பேருந்து நிலைய நடைமேடைகள் கழுவி சுத்தப்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

நகராட்சி பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் அல்லது புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT