ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் பொதுவிருந்து

4th Feb 2020 08:57 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அண்ணாவின் 51 ஆவது நினைவு தினத்தையொட்டி பொது விருந்து மற்றும் இலவச உடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கோயில் திருக்கல்யாணம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கோயில் தக்காா் குமரன் சேதுபதி தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ஜெயா முன்னிலை வகித்தாா். அதிமுக நகா் செயலாளா் கே.கே.அா்ச்சுனன், திமுக நகரச் செயலாளா் கே.இ.நாசா்கான், பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன், கோயில் ஊழியா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT