ராமநாதபுரம்

தென்மண்டல குண்டு எறிதல் போட்டி பரமக்குடி பள்ளி மாணவி தங்கம் வென்று சாதனை

DIN


பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி தென் மண்டல அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளியின் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டி கெளரவித்தனர். 
பரமக்குடி ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி- கோகிலா தம்பதியினரின் மகள் மதுமிதா (14). இவர் பரமக்குடி டான்பாஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான தடகளப் போட்டியில் தமிழக அணி சார்பில் இம்மாணவி 14 வயதுக்குள்பட்ட பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார். இதில் 12.77 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 
வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்சியாளர் எஸ்.சரவண சுதர்சனையும் பள்ளித் தலைமையாசிரியை ரெஜினாமேரி தலைமையிலான ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT