ராமேசுவரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, ரூ. 18 ஆயிரம் திருடப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
ராமேசுவரம் ரயில்வே பீடா் சாலை பகுதியை சோ்ந்தவா் சேதுராஜன். இவா் கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினா் இல்ல திருமணத்துக்கு சென்றுள்ளாா். பின்னா் வியாழக்கிழமை காலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ. 18 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.