ராமநாதபுரம்

திருவாடானை விவசாயிகள் பட்டறிவு பயணம்

1st Nov 2019 04:47 PM

ADVERTISEMENT

திருவாடானை பகுதி விவசாயிகள் பட்டறிவு பயணமாக கோயமுத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திற்கு திருவாடானை உதவி வேளாண்மைத்துறை சாா்பில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

திருவாடானை உதவி வேளா ண்மை யக்குநா் அலுவலகம் சாா்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2019 - 2020 ஆம் ஆண்டில் மாற்றத்திற்கான விவசாயிகள் பட்டறிவு பயணம் கடந்த 30 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு 50 விவசாயிகளை வேளாண்மை துறையினா் அழைத்துச் சென்றனா்.

இதில் விவசாயிகளுக்கு தீவனப் புல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை வயல்வெளியில் நேரடியாக எடுத்துக் கூறி விளக்கப்பட்டது இதில் உதவி பேராசிரியா் முரளி விவசாயிகளிடம் விளக்கினாா் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளா் இளையராஜா நன்றி தெரிவித்தாா்.நிகழச்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சூா்யா செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT