திருவாடானையில் சித்திரை திருவிழா

திருவாடானையில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 

திருவாடானையில் உள்ள ஸ்ரீ பிடாரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. 
 ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், கருப்பர் வேடமிட்டும், காவடி எடுத்தும் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com