முதுகுளத்தூரில் இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை பலியானார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகேயுள்ள மொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் ராஜ்குட்டி (எ) மாதவராஜ் (26). இவர் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில் இருந்து கமுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது, பெட்ரோல் நிலையம் அருகில் தூரி கிராமத்தைச்சேர்ந்த சுப்பிரமணியன் (60) சாலையை கடக்க முயன்றார். அப்போது மாதவராஜ் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியனுக்கு கால் முறிந்து ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் பலத்த காயமடைந்த மாதவராஜ் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவராஜ் உயிரிழந்தார்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.