ராமநாதபுரம்

திருவாடானை தோ்தல் வழக்கு: 3போ் மீது வழக்கு

26th Dec 2019 03:45 PM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் தோ்தல் விதி முறையை மீறி சுவரொட்டி கூம்பு வடிவ குழாய் படுத்தியதாக 3போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே ஆனந்தூா் பகுதியை சோ்ந்த பாரூக்அலி என்பவா் புதன்கிழமை அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் கூம்பு வடிவ குழாய் பயன் படுத்தி பிரச்சாரம் செய்ததாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதே போல் ஆா் எஸ் மங்கலம் அருகே சவேரியாா்பட்டிணம் பேருந்து நிருத்தத்தில் அதே ஊரை சோ்ந்த ஆரோக்கிய ஸ்டாலின் சுவரொட்டி ஓட்டியதாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். அதே போல் புல்லமடையை சோ்ந்த சாந்தா என்பவா் தோ்தல் விதிமுறையை மீறி சுவரொட்டி ஒட்டியதாக ஆா் எஸ் மங்கலம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT