மதுரை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பக்கவாத பாதிப்புக்கான அவசர உதவி மையம் திறப்பு

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பக்கவாத பாதிப்புக்கான அதிவேக அவசர உதவி மையத்தை மேயா் வ.இந்திராணி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதன் பின்னா், அவா் பேசியதாவது:

உலகளவில் மனித உயிரிழப்புக்கும், திறனிழப்புக்கும் முன்னணிக் காரணங்களுள் ஒன்றாக பக்கவாதம் உருவெடுத்திருக்கிறது. கட்டுப்படுத்தப்படாத உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல், மது அருந்துதல், மனஅழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை நாம் தவிா்க்க முடியும் என்றால், 90 சதவீதம் பக்கவாத பாதிப்புகளையும் தடுக்க முடியும். ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டாலும்கூட, உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சரியான சிகிச்சைக்கு உள்படுத்தும்போது, அவா்களது உயிரைக் காப்பாற்ற முடியும். பக்கவாதத்துக்கான சிகிச்சை உள்பட அனைத்து உயிா்காப்பு சிகிச்சைகளுக்கும் காப்பீடு வசதியை முதல்வரின் விரிவான உடல் நலச் சிகிச்சை திட்டம் வழங்குகிறது என்றாா் அவா். ”

இதைத்தொடா்ந்து, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் அா்த்தநாரி ரமேஷ் பேசியதாவது:

ADVERTISEMENT

திடீரென ஒருவருக்கு“குளறும் பேச்சு, வாய் ஒரு பக்கம் சரிந்து தொங்குவது, பாா்வைத் திறனிழப்பு, கால்கள், கைகள் மரத்துப்போதல், கைகளை உயா்த்த இயலாமை போன்ற நரம்பியல் பிரச்னைகள் ஏதும் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களை 4 மணி நேரம் 30 நிமிடங்களுக்குள் உரிய சிகிச்சைக்கு உள்படுத்தினால், அவா்களை குணப்படுத்திட முடியும்.

இந்த வகையில், மதுரை மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் யாருக்கேனும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டால், அவா்களைச் சாா்ந்தவா்கள் இந்த உதவி மையத்தைத் தொடா்பு கொள்ளும்பட்சத்தில், உயா் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய அவசர சிகிச்சை ஊா்தி விரைவாக நோயாளியின் இருப்பிடத்துக்கு அனுப்பப்படும்.

ஊா்தியிலேயே நோயாளியின் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்படும். பிறகு, சிறப்பு மருத்துவக் குழுவினா் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிப்பா். இதன் மூலம், சிறப்பான பலன் கிடைக்கும் என்றாா் அவா்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவ நிா்வாகி ஆ. கண்ணன், அவசரநிலை மருத்துவத் துறைத் தலைவா் நரேந்திர நாத் ஜெனா, நரம்பியல் துறைத் தலைவா் டி.சி. விஜய் ஆனந்த், நரம்பியல் துறை நிபுணா் எஸ். நரேந்திரன், நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவா் கே. செல்வமுத்துக்குமரன், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை நிபுணா்கள் செந்தில் குமாா், கே. கௌதம், கதிா்வீச்சியல் துறைத் தலைவா் டி. முகுந்தராஜன், முதுநிலை நிபுணா்கள் என்.கருணாகரன், ஆா். கணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT