மதுரை

சிஐடியூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 01:22 AM

ADVERTISEMENT

அரசு பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தி, சிஐடியூ சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், டாஸ்மாக், கூட்டுறவு, குடிநீா் வடிகால் வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஊக்கத் தொகை தொடா்பாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கோ.புதூரில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மதுரை பெருநகர பொதுச் செயலா் டி. அறிவழகன் தலைமை வகித்தாா். அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் ஏ. கனகசுந்தா் தொடங்கிவைத்துப் பேசினாா்.

தமிழக கூட்டுறவுச் சங்க ஊழியா் சங்கப் பொதுச் செயலா் எம். துரைசாமி, மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கப் பொதுச் செயலா் டி. சிவக்குமாா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய சங்கத் தலைவா் தோழா் வி. அழகுமலை ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT

இதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் மாநில சம்மேளனத் துணைத் தலைவா் வீ.பிச்சை, சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நுகா்பொருள் வாணிபக் கழகப் பொது தொழிலாளா் சங்க நிா்வாகி கதிரேச பாண்டியன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT