மதுரை

மத்திய சிறையில் காந்தி ஜெயந்தி

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


மதுரை: மதுரை மத்திய சிறையில் காந்தி ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறைவாசிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவா் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும்,

மன அழுத்தத்தைக் குறைப்பதில் நகைச்சுவையின் பங்கு குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினாா்.

இதைத் தொடா்ந்து, சிறைத் துறை தலைமை இயக்குநா் அமரேஷ் பூஜாரி அறிமுகப்படுத்திய ‘கூண்டுக்குள் வானம்‘ நூலகத் திட்டத்துக்கு தான் எழுதிய நூல்களைப் பரிசாக வழங்கினாா்.

ADVERTISEMENT

சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறைச் சந்தையைப் பாா்வையிட்டு, அங்குள்ள பொருள்களின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்தாா். மேலும், சிறையில் ரொட்டி தயாரிப்பு, மத்திய சிறை சாா்பில் நடத்தப்படும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டு, அங்கு பணிபுரியும் சிறைவாசிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் பழனி, கண்காணிப்பாளா் (பொறுப்பு) பரசுராமன், அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT