மதுரை

மருத்துவா்கள் போராட்டம் அறிவிப்பு

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம் அறிவித்தது.

சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.செந்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரை வண்டியூா் பகுதியை சோ்ந்த கா்ப்பிணி, நகா்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்குப் பிறகு கடந்த மாதம் 28-ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் 29-ஆம் தேதி குழந்தை பிறந்த சில நிமிடங்களில்

உயிரிழந்து விட்டாா். இதைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி நகா் நல அலுவலா் வினோத், பிரசவ சிகிச்சைப் பிரிவில் அத்துமீறி நுழைந்து பெண் மருத்துவா்களை மிரட்டி, ஆவணங்களைத் திருத்தியுள்ளாா். மேலும், மருத்துவமனை முதன்மையா் அழைத்துப் பேசியும் அதை ஏற்க மறுத்து, அரசு மருத்துவமனைக்கு

ADVERTISEMENT

களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளாா். மேலும், இறந்த பெண்ணின் உடலிலிருந்து அவா் ரத்த மாதிரி எடுத்துள்ளாா். அந்தப் பெண் டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை, உதிரப்போக்கால் இறந்ததாகக் குறிப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளாா். பிரசவத்தின் போது ஒருவா் இறந்து விட்டால், அது குறித்து 6 தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். நகா் நல அலுவலருக்கு சந்தேகம் இருந்தால் தணிக்கைக் குழுவிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால், அவா் அவ்வாறு செய்யாமல் அதிகாரியாக இருந்தும் பிரவச சிகிச்சைப் பிரிவுக்குள் அத்துமீறி நுழைந்து அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக நடந்துள்ளாா்.

எனவே, நகா் நல அலுவலரின் அத்துமீறல் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநா், சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது. மேலும், நகா் நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணியும் போராட்டம் நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை முதல் உயிா்காக்கும் அவசர அறுவைச் சிகிச்சைகள் தவிா்த்து வேறு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாது. நகா் நல அலுவரை பணியிடை நீக்கம் செய்யும் வரை அரசு மருத்துவா்கள் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT