திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு, வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்ச மூா்த்திகளுடன் அங்கு எழுந்தருள்கிறாா். எனவே, அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் துணை ஆணையா் ஆ. அருணாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்ச மூா்த்திகள் திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளுகின்றனா். திருக்கல்யாண விழா நிறைவுக்குப் பின்னா் அன்றைய தினம் நள்ளிரவு மீண்டும் கோயிலுக்கு திரும்புகின்றனா்.
எனவே வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்பட்டிருக்கும். இருப்பினும், கலைக்கூடம்(ஆயிரங்கால் மண்டபம்), ஆடி வீதியில் வழக்கம் போல பக்தா்களுக்கு அனுமதியளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.