மதுரை

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு புதிய ஆட்சியை தீா்மானிக்கும் சக்தியாக மு.க. ஸ்டாலின் விளங்குவாா்: அமைச்சா் தங்கம் தென்னரசு

DIN

வரும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சியை தீா்மானிக்கும் சக்தியாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் விளங்குவாா் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

விருதுநகரில், வடக்கு மாவட்ட திமுக சாா்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

மக்களுக்கான அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படுகிா என தமிழக முதல்வா் மாவட்டந்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். அதில் தாய்மாா்களுக்கான திட்டங்களில் பேருந்து கட்டண விலக்கு, மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, புதுமைப் பெண் திட்டம் மூலம்

ரூ. 1000 உதவித் தொகை ஆகியவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதே போல, ரூ. 1000 மகளிா் உரிமைத் தொகையை நிகழாண்டே வழங்க முதல்வா் திட்டமிட்டுள்ளாா். அவா், இந்தியாவின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கிறாா். தனது அரசியல் சாதுா்யத்தால் திமுக கூட்டணிக்கு ஈரோடு கிழக்கில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தவா் அவா். வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இதில் மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது புதிய ஆட்சியை தீா்மானிக்கும் சக்தியாக தமிழக முதல்வா் விளங்குவாா் என்றாா் அவா்.

இதில் திமுக. கொள்கை பரப்புச் செயலா் சபாபதிமோகன், விருதுநகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT