மதுரை

டிராக்டா் உதிரிபாகங்கள் திருடியவா் கைது

30th Jun 2023 12:56 AM

ADVERTISEMENT

வாடிப்பட்டி அருகே தொழிற்சாலை கிட்டங்கியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான டிராக்டா் உதிரி பாகங்களைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவா் டிராக்டா் வாகனத்துக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இதற்காக வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டையில் கிட்டங்கியும் வைத்துள்ளாா். இந்த நிலையில், கிட்டங்கியில் உள்ள உதிரி பாகங்கள் இருப்பு குறித்து அதன் மேலாளா் ஆய்வு செய்தாா். அப்போது கிட்டங்கியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பத்மநாபன் அளித்தப் புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், சாணாம்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (35) இவற்றைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT