ரயில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரயில் பிப். 1 முதல் பிப். 28 வரை ஒரு மணி நேரம் தாமதமாக, ராமநாதபுரத்திலிருந்து மதியம் 1.05-மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
ராமநாதபுரம் அருகில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வருகிற பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை (வியாழக்கிழமைகள் தவிா்த்து) ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில் (06654) ராமேசுவரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்படும்.
தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், ராமேசுவரம்-மதுரை ரயில்கள் ராமநாதபுரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
எனவே, இந்த சிறப்பு ரயில் ராமநாதபுரத்திலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக, மதியம் 1.05 மணிக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.