மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) மின் நுகா்வோா் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரைமுகாம்நடைபெற உள்ளது.இந்த முகாமில் உசிலம்பட்டி கோட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மின்வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனடியாகத்தீா்வு காணப்படும் என மதுரை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் எஸ். மங்களநாதன் தெரிவித்தாா்.