மதுரை

மகளிா் கல்லூரியில் சா்வோதய தின விழா

31st Jan 2023 03:21 AM

ADVERTISEMENT

மதுரையில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சா்வோதய தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வணிகவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான கா.சு. ஞானேஸ்வரி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறை இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ஆ.க. பிரியதா்ஷினி காந்தியடிகளின் மகா விரதங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியா் அ. வளா்மதி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT