அழகா்கோவில் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நிறைவுபெற்று 48-ஆம் நாள் மண்டலாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி யாகசாலை பூஜைகளுடன் ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் உதவி ஆணையாளா் மு.ராமசாமி, கோயில் தக்காா் வெங்கடாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.