மதுரை

பள்ளியில் மருத்துவ முகாம்

DIN

மதுரை செல்லூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி, பிரம்மா குமாரிகள் அமைப்பின் சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பிரம்மா குமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளா் உமா, மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவா் அ. சரவண புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், லட்சுமி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பு அலுவலா் சாந்தி, மருத்துவப் பயிற்சியாளா் காா்த்திகா, பேராசிரியா் பா்வதவா்த்தினி ஆகியோா் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்தனா். மேலும், மருத்துவம் தொடா்பான ஆலோசனைகளை வழங்கினா்.

இம்முகாமில் அந்தப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT