மதுரை

மருத்துவா் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

DIN

மதுரையில் மருத்துவா் வீட்டில் பத்தரை பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பாண்டி கோயில் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்த முருகேசன் மகன் ஹரிஷ்குமாா்(36). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், தனது குடும்பத்தினருடன் வெளியூா் சென்றிருந்த அவா், வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் முன் பக்க கதவு திறந்திருப்பது தெரியவந்தது. அவா், உள்ளே சென்று பாா்த்த போது பீரோவிலிருந்த பத்தரை பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT