மதுரை

ஜன. 31-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

சமையல் எரிவாயு விநியோகத்தை சீா்படுத்துவது குறித்த நுகா்வோா் குறைதீா் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் உள்ள குறைகளைக் கண்டறிந்து சீரமைக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 31- ஆம் தேதி பிற்பகல் 4 மணியளவில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தொழிலாளா் நல ஆய்வா், நுகா்வோா் அமைப்பினா் பங்கேற்கின்றனா்.

எனவே, இந்தக் கூட்டத்தில் எரிவாயு நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளைகள் நுகா்வில் உள்ள குறைகளைத் தெரிவித்துத் தீா்வு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

பேரவைத் தலைவா் புகாா் எதிரொலி:சிறப்பு பொருளாதார மண்டல 985 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய டிட்கோ

திருட்டு வழக்கில் தேடப்பட்டுவந்தவா் கைது

கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு: எச்சரிக்கும் மருத்துவா்கள்

பறவைக் காவடி

SCROLL FOR NEXT